கோவையில் 389 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது

கோவையில் நேற்று ஒரே நாளில் 389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்து உள்ளது.

Update: 2020-10-11 23:00 GMT
கோவை, 

கோவையில் நேற்று பீளமேடு, சிங்காநல்லூர், குனியமுத்தூர், ராமநாதபுரம், செல்வபுரம், சரவணம்பட்டி, துடியலூர், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 117 என உயர்ந்து உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது முதியவர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 63 மற்றும் 71 வயது முதியவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 72 வயது முதியவர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 491 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 390 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் கோவையில் இதுவரை 31 ஆயிரத்து 709 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்து உள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 917 பேர் இந்த தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்