குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் விரக்தி அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

Update: 2020-10-16 22:48 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் எல்.ஐ.சி. நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோகிலப்பிரியா (வயது 27). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கோகிலப்பிரியா தனது குழந்தையை அடிக்கடி திட்டுவதும், அடிப்பதுமாக இருந்துள்ளார். இதை தனபாலன் பலமுறை கண்டித்து உள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விஷம் குடித்து தற்கொலை

நேற்றுமுன்தினமும் கோகிலப்பிரியா தனது குழந்தையை அடித்தார். இதை பார்த்த தனபாலன் கோபமடைந்து மனைவியை கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த கோகிலப்பிரியா, தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார்.

உடனடியாக அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு கோகிலப்பிரியா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கோகிலப்பிரியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்