அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-12-03 00:04 GMT
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று செந்துறை ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 570 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4, 443 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 456 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே மாவட்டத்தில் 2, 244 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2, 215 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 8 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 417 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்