சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2021-01-06 06:13 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேற்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 26) . இவருக்கும் கடலூர் சுப்புராயலு நகரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2018- ம் ஆண்டு விஜயகுமார், அந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

10 ஆண்டு சிறை

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி கடலூர் போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி எம்.எழிலரசி தனது தீர்ப்பில், சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். .

மேலும் செய்திகள்