விருத்தாசலம் மணிமுக்தாற்றி்ல் வெள்ளப்பெருக்கு: 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்மழை பெய்தது.

Update: 2021-01-11 05:46 GMT
விருத்தாசலம்,

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்மழை பெய்தது. இதன் காரணமாக கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விருத்தாசலம் அருகே மணிமுக்தா ஆற்றங்கரையோரம் உள்ள சொட்டவனம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. மேலும் சாய்ந்த நெற்கதிர்களில் இருந்த நெல்மணிகள் முளைத்து வீணாக தொடங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், சொட்டவனம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளோம். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து, பராமரித்து வந்த நிலையில் தொடர்மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் சேதமடைந்த பயிர்களை சரியானமுறையில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்