விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி நாகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-12 03:18 GMT
நாகப்பட்டினம்,

நாகை அவுரி திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் எழிலரசி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுஜாதா, மாவட்ட செயலாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சுபா தேவி கலந்து கொண்டு பேசினார். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நாகையில் விதவை பெண்ணை கோவிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நிவாரணம்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்