கடலூர் வண்டிப்பாளையத்தில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கணவர், மாமியார் கைது

கடலூர் வண்டிப்பாளையத்தில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-12 05:52 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் வண்டிப்பாளையம் குழந்தை காலனி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 55). இவரது மகன் கோகுல்(வயது 24). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகள் ஜோதிகா(22) என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 8 மாத கர்ப்பிணியான ஜோதிகா, நேற்று அதிகாலை துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆ.டி.ஓ. விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து சென்று ஜோதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஜோதிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல், ஜோதிகாவின் மாமியார் சாந்தி(45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும். திருமணமான ஓராண்டில் ஜோதியாக இறந்துள்ளதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்