திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-16 20:45 GMT
தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ளது பூவலை கிராமம். இங்கு வசித்து வருபவர் அறிவழகன் (வயது 27). வேன் டிரைவர்.

இவருக்கும் மீஞ்சூரை அடுத்த காட்டூரை சேர்ந்த சுவிதா (24) என்பவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தற்போது சுவிதா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை பூவலை கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த சுவிதா, வேட்டியை கொண்டு தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்