மதுரை,
மதுரை செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி கீதா(வயது 30). இவர்களுக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வருத்தத்தில் இருந்த அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த கீதா, பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.