திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் புரோட்டா மாஸ்டர் தற்கொலை

திருவேற்காட்டில் திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் மனமுடைந்து புரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்தார்.

Update: 2021-02-03 04:00 GMT
பூந்தமல்லி, 

திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அறைக்குள் சென்ற அவர், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேமடைந்த ஷாலினி உள்ளே சென்று பார்த்தபோது சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடன் தொல்லை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சங்கருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும், அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்