மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.

Update: 2021-02-03 17:38 GMT
மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 5 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தநிலையில் மதுரையில் நேற்று 15 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 15 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 89 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி கொரேனாவுக்கு பலியானார். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 458 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்