செல்போனில் ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-02-07 20:17 GMT
பண்ருட்டி, 

கடலூா் மாவட்டம் பண்ருட்டி கந்தன் பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தையல்காரர். இவரது மகள் தரணி(வயது 19). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த தரணி, சமையல் செய்யாமல் செல்போனில் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த தரணி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்