நரிக்குறவர் இளைஞர் திருமணத்திற்கு மேள தாளத்துடன் ஊர்வலமாக சீர் கொண்டு சென்ற உறவினர்கள்

நரிக்குறவர் இளைஞர் திருமணத்திற்கு மேள தாளத்துடன் ஊர்வலமாக சீர் கொண்டு சென்ற உறவினர்கள்

Update: 2021-02-09 06:53 GMT
கீரமங்கலம்
கீரமங்கலம்:
கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் (நரிக்குறவர் காலனி) நேற்று பழங்குடி இன இளைஞரின் திருமண நிகழ்ச்சி நடந்தது. பதாகை வண்ண விளக்குகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் நடந்த திருமணத்திற்கு அந்த மாப்பிள்ளையின் உறவினர்கள் கீரமங்கலம் சிவன் கோவிலில் இருந்து மேள தாளங்களுடன் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பழங்குடி (நரிக்குறவர்) இளைஞர்களின் திருமணங்கள் வெளியே தெரியாமல் நடந்து கொண்டிருந்த நிலை மாறி தற்போது ஆடம்பரமாக நடத்தப்படுவதைப் பார்த்து பொதுமக்கள் வியந்தனர்.


மேலும் செய்திகள்