முதியவர் மர்ம சாவு

முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-02-09 18:44 GMT
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் வேப்பூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதி அருகே முதியவர், மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த முதியவர் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி(வயது 80) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் வீட்டில் தங்காமல் வெளியிலேயே சுற்றிக்கொண்டிருப்பார் என்றும், அதன்படி குன்னம் பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கந்தசாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்