நெல்லை, தென்காசியில் 12 புதிதாக 12 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசியில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-02-09 20:45 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 362 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 61 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 214 பேர் பலியாகி உள்ளனர். 

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 268 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 28 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 159 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்