திருவாரூரில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின்விசை சக்கரம் கலெக்டர் சாந்தா வழங்கினார்

திருவாரூரில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின் விசை சக்கரத்தினை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

Update: 2021-02-10 01:24 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 181 மனுக்களை வழங்கினர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மின்விசை சக்கரம்

முன்னதாக 10 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கலெக்டர் சாந்தா மின்விசை சக்கரத்தினை வழங்கினார். இதில் குலாலர் சங்க நிறுவன தலைவர் தியாகராஜன், மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கருணாகரன் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூஷ்ணகுமார், உதவி இயக்குனர் (கதர் கிராம தொழில்) பிரன்ஜிஸ் தெரசா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்