சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-02-20 00:17 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 8 பேர் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து விட்டதால், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்