விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

இளையான்குடி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-20 17:56 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள நெரூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை(வயது 81). இவருடைய மனைவி வேலம்மாள் (80). சமீபத்தில் இவர் வளர்த்து வந்த ஆடு, மாடுகள் திடீரென இறந்து விட்டன. இதனால் அவர் மிகுந்த கவலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) எடுத்து சாப்பிட்டு விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்