விபத்தில் வாலிபர் பலி

வாலிபர் பலி

Update: 2021-02-21 19:52 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி மந்திரி ஓடை அருகே ஓட்டல் நடத்தி வருபவர் ஆறுமுகச்சாமி (வயது 72). இவர் தனது ஓட்டலில் இருந்து நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த  வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (25) மோதிக் கொண்டதில் ஆறுமுகச்சாமியும், முத்துக்குமாரும் பலத்த காயமடைந்தனர். இதில் காயமடைந்த இருவருக்கும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி கிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முத்துக்குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்