தளவாய்புரம்,
தளவாய்புரம், சேத்தூர் ஆகிய பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்தநிலையில் இரவு 8 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் இங்கு 45 நிமிடம் நீடித்தது. இதனை அடுத்து விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.