உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி

உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2021-02-22 18:57 GMT
நொய்யல்
நொய்யல், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தேங்காய் முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ள போது பறித்து முழு தேங்காயை உடைத்து வெயிலில் காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து தேங்காய் பருப்புகளை வாங்கி பிரபலமான எண்ணெய் நிறுவனங்களுக்கும், பல்வேறு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக தோங்காய் பருப்பு வரத்து அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.135-க்கு விற்றது தற்போது ரூ.132-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்