மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2021-02-22 20:47 GMT
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 680 ஆக அதிகரித்து உள்ளது. மதுரையில் கொரோனா தொற்றுக்கு 460 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்