போலீஸ் ஜீப் தீப்பிடித்து எரிந்தது

போலீஸ் ஜீப் தீப்பிடித்து எரிந்தது பற்றி விசாரணை

Update: 2021-02-22 20:47 GMT
திருச்சி
திருச்சி மன்னார்புரம் பல்துறை அரசு அலுவலக கட்டிட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஒன்று நேற்று முன்தினம் திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். போலீஸ் ஜீப் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேட்டரி மின் கசிவால் தீ பிடித்ததா? அல்லது அந்த ஜீப்பிற்கு வேறு யாரும் தீ வைத்தார்களா? என்பது பற்றி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்