கார் ஏறியதில் மூதாட்டி பலி

கார் ஏறியதில் மூதாட்டி பலி

Update: 2021-02-23 20:35 GMT
சாத்தூர் 
சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பெருமாள். இவரது மனைவி சீனியம்மாள் (வயது80). இவர் தனது வீட்டின் வாசற்படியின் முன்பு அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக சாத்தூர் காமராஜபுரம் முதல் தெருவைச்சேர்ந்த அக்காரக்கனி (50) என்பவர் தனது காரை ஓட்டி வந்தார். இந்தநிலையில் பிள்ளையார் கோவில் தெருமுனையில் காரை திருப்பும் போது வாசலில் அமர்ந்திருந்த சீனியம்மாள் மீது கார் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சீனியம்மாளின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த அக்காரக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்