கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-02-24 18:47 GMT
கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது குளத்துப்பாளையம் ெரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கார்த்திக் கண்ணன் (வயது 31) என்பவரையும், வாங்கபாளையம் ஓட்டை பிள்ளையார் கோவில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மாரிமுத்து (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரிடமிருந்து கஞ்சா பொட்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்