ராஜ அலங்காரத்தில் சவுமியநாராயண பெருமாள்

ராஜ அலங்காரத்தில் சவுமியநாராயண பெருமாள்

Update: 2021-02-24 21:23 GMT
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டு இந்த விழா  கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று சவுமியநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்