தொழிலாளி தற்கொலை

நெல்லை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-24 21:33 GMT
பேட்டை, பிப்:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 48). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு பேச்சியம்மாள் என்ற மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாடசாமிக்கும், மல்லிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில் மல்லிகா வீட்டில் தூங்கி எழுந்து பார்க்கும்போது மாடசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாடசாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்