பிரதோஷ வழிபாடு

திருப்புவனத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது

Update: 2021-02-25 17:40 GMT
திருப்புவனம், 
திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேஸ்வரர், சவுந்தரநாயகி அம்மன் கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ஆளுகைக்கு உட்பட்டது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமய புலவர்களால் பாடல் பெற்ற தலமாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பு. கோவிலில் ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக நடைபெறும். பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் கொடிமரம் அருகே உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி-அம்பாள் கோவிலின் உள் ஆடி வீதியில் வலம் வந்து நந்திக்கு காட்சியளித்தனர். சுவாமி- அம்பாளுக்கு தீபாராதனை செய்து பின்னர் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்