செங்கோட்டையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்க செங்கோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட தலைவா் அருணாசலம் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் கணேசன், வட்ட தலைவா் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்ட செயலாளா் மாரியப்பன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 4-ம் நிலைக்கு இணையான டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பொருளாளா் முருகையா, செயற்குழு உறுப்பினா் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்ட துணை தலைவா் மணிகண்டன் நன்றி கூறினார்.