மதுவிற்ற 29 பேர் கைது

மதுவிற்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-02-28 15:25 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாகவும், விற்பனைக்காக மது வைத்திருந்ததாகவும் 29 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்