விபத்தில் வாலிபர் பலி

பூவந்தி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2021-02-28 17:06 GMT
திருப்புவனம்,
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). இவர் தனது நண்பரான செல்லூரை சேர்ந்த சூர்யபிரகாசுடன் சிவகங்கையில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்றார். பூவந்தியை அடுத்த அரசனூர் சமத்துவப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பிரவீன்குமார் தலையில் ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சூர்யபிரகாஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து பிரவீன்குமாரின் தந்தை பால்ராஜ் பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் எது? என விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்