திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரை 44 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 406 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 166 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 699 பேர் இறந்துள்ளனர்.