வீட்டில் பிணமாக கிடந்த மூதாட்டி

அம்பை அருகே கல்லிடைக்குறிச்சியில் வீட்டில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.

Update: 2021-03-05 20:02 GMT
அம்பை, மார்ச்:
கல்லிடைக்குறிச்சி மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி சிவனியம்மாள் (வயது 75). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வன்னிமுத்து இறந்து விட்டார். இதனால் சிவனியம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் சிவனியம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
 இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, சிவனியம்மாளின் வீட்டின் ஓட்டு மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் குளியலறையில் சிவனியம்மாள் வழுக்கி விழுந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்