கோவிலில் திருட்டு

நாங்குநேரி அருகே முதலைக்குளம் கிராமத்தில் கோவிலில் தங்க கண்மலரை மர்மநபர் திருடிச் சென்றார்.

Update: 2021-03-05 20:07 GMT
நாங்குநேரி, மார்ச்:
நாங்குநேரி அருகே முதலைக்குளம் கிராமத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவில் இந்த கோவிலின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கோவிலில் இருந்த 5 கிராம் தங்க கண்மலரை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா தங்கபெருமாள் அளித்த புகாரின்பேரில், மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்