தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

நெல்லையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-03-05 20:18 GMT
நெல்லை, மார்ச்:
தேவேந்திர குல மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாநில அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘எங்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் குமுளி ராஜ்குமார் மற்றும் அருண், வினோத் பாண்டியன் ஆகியோரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. குமுளி ராஜ்குமார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குமுளி ராஜ்குமார் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்