உத்தனப்பள்ளி, பர்கூர் பகுதிகளில் 2 பெண்கள் தற்கொலை

உத்தனப்பள்ளி, பர்கூர் பகுதிகளில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-03-05 22:29 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அஞ்சலகிரியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி சங்கீதா (வயது 38). இவர் குடும்ப தகராறு  காரணமாக  விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கீதா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பர்கூர் கரீம்சாய்பு தெருவை சேர்ந்தவர் நித்யானந்தன். இவருடைய மனைவி மதிமலர் (வயது 40). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குறையவில்லை. 
இதனால் மனமுடைந்த மதிமலர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்