வேட்டமங்கலத்தில் மருத்துவ பரிசோதனை முகாம்

வேட்டமங்கலத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2021-03-06 18:07 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மயில்வாகனன், கார்த்திக், கிராம சுகாதார செவிலியர்கள், லேப் டெக்னீசியன், உதவியாளர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். இவர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு சர்க்கரை மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரை, சத்து மாத்திரைகள் மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்