கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

சுரண்டை அருகே வீராணத்தில் கருப்புக்கொடியுடன் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-03-06 21:31 GMT
சுரண்டை, மார்ச்:
சுரண்டை அருகே வீராணத்தில் தேவர் சமுதாயத்தினர் சார்பில், தமிழக அரசு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை திரும்பப் பெறக்கோரி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில் இருளப்பன், பூல் பாண்டியன் உள்பட சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்