போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-07 20:50 GMT
கடையம், மார்ச்:
தஞ்சாவூர் மாவட்டம் மணியாற்றங்கரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருைடய மகன் தேவா (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். அவருடன் கடையம் பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப்பெண் தனது ஊருக்கு வந்துவிட்டார். இந்தநிலையில் அந்த மைனர் பெண் திடீரென காணாமல் போனார். இதுபற்றிய புகாரின் பேரில் கடையம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தேவா திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தஞ்சாவூருக்கு சென்று அந்த மைனர் பெண்ணை மீட்டு அழைத்து வந்தனர். தேவா மீது கடையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்