டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது.

Update: 2021-03-08 18:21 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பனையடியான் (வயது 45). இவர் கடந்த 5-ந்தேதி ராமநாதபுரம் முருகன் கோவில் அருகில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சனமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அழகுமலை என்ற அண்ணாமலை(30), ஆர்.எஸ். மடையை சேர்ந்த  செந்தில் என்ற முத்துமுருகன்(31) ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கஜேந்திரன்(28) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்