வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-03-10 19:19 GMT
நெல்லை:

நெல்லையை அடுத்த பேட்டை மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மகன் முருகன் (வயது 21). இவர் மீது மானூர் போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால், முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை மானூர் போலீசார் பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்