21 பேருக்கு கொரோனா

மேலும் 21 பேருக்கு கொரோனா

Update: 2021-03-11 16:40 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 21 பேருக்கு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 559-ஆக உயர்ந்துள்ளது.  14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 203-ஆக உள்ளது. தற்போது 132 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 224 பேர் சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்