விஷம் குடித்து விவசாயி சாவு

நெல்லையில் விஷம் குடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-13 19:44 GMT
நெல்லை:

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் நாராயணன் (வயது 55). விவசாயியான இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரி பகுதியில் தொழுவம் அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் அங்கு சென்று மாடுகளுக்கு தீவனம் வைத்து பராமரித்து வந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தொழுவத்தில் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று திடீரென்று இறந்தது. அதிலிருந்து நாராயணன் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தொழுவத்துக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது நாராயணன் விஷம் குடித்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்