பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2021-03-15 20:21 GMT
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை சின்னக்கன்னு நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி தாரணி(வயது 29). இவர் அப்பகுதியிலுள்ள வங்கிக்கு சென்று விட்டு மதுரை-தேனி சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாரணி அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலிைய பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தாரணி கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத்தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்