சிகிச்சை பெற்று வந்த கைதி திடீர் சாவு

சிகிச்சை பெற்று வந்த கைதி திடீர் சாவு

Update: 2021-03-16 18:43 GMT
திருப்பத்தூர்
காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 52). இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு முழங்காலில் பிரச்சினை ஏற்பட்டு வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்