4 பேர் கைது

4 பேர் கைது

Update: 2021-03-16 20:02 GMT
மதுரை,மார்ச்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது அங்கு வந்த 4 பேர் அவரிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். இது குறித்து அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்த சிவக்குமார் (39). அவரது சகோதரர்கள் சிவனாண்டி (32), கார்த்தி (28) மற்றும் ஆறுமுகம் (40) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்