தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-17 06:47 GMT
ஊத்துக்கோட்டை, 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவர் தேர்வாய் கண்டிகையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (29), மகள் பூர்விகா (10), மகன் தர்ஷ்னா (7). இந்த நிலையில் ரேவதி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ரேவதி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்