கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-03-17 12:27 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு சத்யாநகரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் வினோத் (வயது 24). இவர் அந்த பகுதியில் வைத்து கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விரைந்து சென்று வினோத்தை கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை அவர் பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்