திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

Update: 2021-03-18 13:05 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து பெரியகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் சேகர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகள்