திருவள்ளூர் அருகே வாலிபருக்கு வெட்டு

திருவள்ளூர் அருகே வாலிபருக்கு கத்தியால் தலையில் வெட்டி உள்ளார்.

Update: 2021-03-18 13:13 GMT

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுப்பட்டு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவருக்கும் அவரது சகோதரர் சுரேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் சேகர் ஆகியோர் இதை தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த கத்தியால் பிரகாசின் தலையில் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பிரகாஷ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக பாலசுப்பிரமணியன், சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகள்